வவுனியா வீதியில் சொகுசு வாகனம் விபத்து : 6 பேர் படுகாயம்!!

511

வவுனியா திருகோணமலை வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனத்தில் சென்ற 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஹெப்பிட்டிக்கொலாவ பொலிஸ் பிரிவில் 13ஆம் கட்டைப்பகுதியில் மாலை 4.30 மணியளவில் அதிகவேகம் காரணமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணம் மேற்கொண்டவர்களில் 6பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.