வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக இன்று (04.12.2018) இரவு 8.30 மணி தொடக்கம் வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதினையடுத்து வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு சென்றுள்ளனர்.
வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களின் நடவடிக்கையின் காரணமாக அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக 8.30 மணிக்கு தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கிய போதிலும் 9.40 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தனர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.





