வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர்கைது!!

718

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைதடுப்புப் பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞ்சா இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று (04.12) காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வைத்து வழிமறித்த பொலிசார் சோதனை மேற்கொண்ட போதே குறித்த கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கஞ்சாவினை தமது உடைமைக்குள் மறைத்துவைத்து கடத்திச்சென்ற நிலையிலேயே அவர்களை கைதுசெய்ததாக பொலிசார் தெரிவித்தனர் .

கைதுசெய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.