மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயாராக இருந்த நிலையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை தமிழ் அகதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு விசேட தடுப்பு முகாமில் இவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இவர்களை கைது செய்ய முயற்சித்த போது பொலிஸார் மீது முகாமில் இருந்த மேலும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 7 போர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.




