ஐரோப்பிய நாடுகள் போன்று மாறிய இலங்கை : ஆபத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் மைத்திரி!!

658

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளில் வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நெருக்கடி என்று எதுவுமில்லை. அரசியல் உறுதியற்ற நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன், இத்தாலியிலும் ஏற்பட்டுள்ளதாக மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் உறுதியின்மை எங்களுக்கு ஒரு புதுமையான விடயம் என்றாலும், வெளிநாட்டு நாடுகளுக்கு அப்படியில்லை.

ஜேர்மனியில் ஆறு மாதங்களாகவும், இத்தாலியில் 5 வாரங்களாகவும் அரசாங்கம் இருக்கவில்லை. அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் ஒரே இரவில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஒரு வாரத்துக்குள் தீர்ந்து வந்து விடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக இலங்கையில் அரசியல் ஸ்திரமன்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அரசாங்கமே இல்லாமல் போயுள்ளது.

வலுக்கட்டாயமாக பிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை கலைத்தமை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.