வவுனியா ஓமந்தையில் ஹெரோயின், கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஐவர் கைது!!

578

வவுனியா ஓமந்தை பகுதியில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவினை வாகனத்தில் கடத்திச் சென்ற ஐவரை இன்று (05.12.2018) அதிகாலை 12.10 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் கேரள கஞ்சாவினை கொண்டு செல்வதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த வாகனத்தினை ஒமந்தை பகுதியில் வைத்து மறித்துள்ளனர்.

இதன் போது வாகனம் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. வாகனத்தினை பின்தொடர்ந்த பொலிஸார் வாகனத்தினை மடக்கிப்பிடித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சோதனை நடவடிக்கையின் போது வாகனத்தினுலிருந்து 2கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் வாகனத்தில் பயணித்த பரந்தன் மற்றும் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 30, 29, 18, 36, 45 வயதுடைய ஐவரை கைது செய்துள்ளதுடன் வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.