வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!!

901

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.

இன்றுமாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் தேடியுள்ளார். இதன்போதே கிணற்றில் மகன் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.

பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் செல்வம் (வயது 40) என்ற நபரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.