வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள்!!

656

 

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கும் சென்று பயணிகளை எற்றிச் செல்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று(07.12) காலை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் உள்ளூர் பேருந்து சேவைகளை பழைய பேருந்து நிலையம்வரை விஸ்தரிக்குமாறு வவுனியா வர்தகர்சங்கம், ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதற்கமைவாக இன்றிலிருந்து உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தரிப்பிடத்தில் சிலநிமிடங்கள் தரித்துநின்று சேவையில் ஈடுபடவுள்ளது.

அதன் ஆரம்பநிகழ்வு இன்று காலை நடைபெற்றது. விருந்தினர்கள் நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் பேருந்து சேவையையும் ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் நகரசபைத் தலைவர் இ.கௌதமன், மாவட்டச் செயலர் எம்.கனீபா, பிரதேச செயலர் கா.உதயராஜா, நகரசபை செயலாளர் இ.தயாபரன், உப நகரபிதா சு.குமாரசாமி, ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் கு.திலீபன், பொலிஸ் அத்தியட்சகர் எம்.தென்னகோன், வர்தகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.