வவுனியாவில் யுத்தம் வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் என சுவரொட்டிகள்!!

307

யுத்தம் வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் எனப் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் வன்னி மக்கள் என உரிமை கோரப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஓட்டப்பட்டுள்ளன.

அச் சுவரொட்டிகளில் “தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம். 30 வருட யுத்தத்தின் துயரங்கள் போதும், மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையை வன்மையாக கண்டிக்கிறோம், மீண்டும் வன்முறை வேண்டாம். ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றோம், தேசிய பாதுகாப்பை காப்போம், சுதந்திரமான நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்” என எழுதப்பட்டிருந்தது.