மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து கிராம மக்களின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளத்தில் இன்று (08.12.2018) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையினை கண்டிக்கின்றோம், தேசிய நல்லிணக்கத்ததை காப்பாற்றுவோம், 30 வருட யுத்தத்தினால் நாம் துயரப்பட்டது போதும், ஒன்றுபட்டு எழுந்திடுவோம் பிரதேச அபிவிருத்திக்காக கை கொடுப்போம், சமாதானத்தினை சீர்குலைக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய் போன்ற வாசகங்களை ஏந்தியவண்ணம் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய போராட்டமானது அமைதியான முறையில் ஈச்சங்குளம் 611வது இராணுவ தலைமையகம் வரை சென்றடைந்தது.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஞரை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, 611 வது பிரிவின் இராணுவத் தளபதி ஆகியோரிடம் கையளித்தனர்.





























