வவுனியாவில் இளைஞர் யுவதிகளுக்கான இலக்குகளை நோக்கிய செயலமர்வு!!

738

வவுனியா திருநாவற்குளத்தின் இளைஞர் யுவதிகளுக்கான இலக்குகளை மேம்படுத்துகின்ற செயலமர்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகரன் கேசவனின் வேண்டுகோளிற்கிணங்க நடைபெற்றது.

மேற்படி செயலமர்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நேற்று (07.12.2018) மாலை 5.30 மணிக்கு கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின் வளவாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரதிப்பதிவாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களின் தொழில்முறைக் கல்வியின் முக்கியத்துவம் வாழ்க்கையின் இலக்குகளை எவ்வாறு அடைவது தொடர்பான செயலமர்வை நடாத்தினார்.

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வின் அதிதிகளாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் வவுனியா நகரசபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.