வவுனியா சாந்தசோலை இந்து மயான அஞ்சலி செலுத்தும் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிற்பகல் 12 மணியளவில் சாந்தசோலை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே.காதர் மஸ்தானின் குறித்து ஒதுக்கப்பட்ட வருடாந்த நிதியிலிருந்து 7.5 மில்லியன் ரூபாவின் அமைக்கப்படவுள்ள அஞ்சலி செலுத்தும் மயானக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான கே.எம்.ஆப்தீன், ஜே.எம்.பசீர் தலைமையில் நாட்டிவைக்கப்பட்டது.
சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.











