வவுனியா நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பித்துவைப்பு!!

692

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் இன்று (09.12.2018) காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலச்சந்திரன் சிந்துஜனின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா தெற்கு பிரதேச சபையின் நெளுக்குளம் வட்டார பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன்(பாபு) சிபாரிசின் ஊடாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதனின் 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

550 மீற்றர் நீளமான , மிக மோசமான நிலையிலிருந்த நெளுக்குளம் காளி கோவில் வீதி செப்பனிடப்படும் பணியிணை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன்(பாபு), கிராம இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.