ரணில் விடயத்தில் மைத்திரி தொடர் விடாப்பிடி : மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!!

378

நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்க கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சற்று முன்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மகிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.