இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம்!!

254

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய என்டநொவ் 124 ரக சரக்கு விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து உகண்டா வரை பயணித்த இந்த விமானம் நேற்று அதிகாலை 5.26 மணியளவில் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கோளாறுகள் சரியப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் உகண்டா நோக்கி விமானம் சென்றதாக மத்தல விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.