மட்டக்களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

589

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்லடியில் இயங்கிவரும் கட்டட நிர்மாணம் செய்யும் வேலைத்தள பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கூழாவடியை சேர்ந்த 55 வயதுடைய எஸ்.சிவசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கே.கணேஸதாசின் மரண விசாரணையினை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த வேலைத்தளத்தில் காவல் கடமையில் இருந்தபோதே இவர் உயிரிழந்துள்ளதாகவும் இவர் மாரடைப்பினால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.