13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை : கொன்று புதைத்த கொடூரம்!!

342

 

மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை

இந்தியாவில் 13 வயது மகளை இரண்டாண்டுகள் சீரழித்துவிட்டு பின்னர் கொன்று புதைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கோடக் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரா பகதூர் பிரதன் (45). இவருடைய மனைவி கடந்த 2016-ல் வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில் தனது 13 வயதான மகளுடன் சுக்ரா வசித்து வந்தார். மகள் என்றும் பாராமல் கடந்த இரண்டாண்டுகளாக சிறுமியை தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார் சுக்ரா.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தை சுக்ராவிடம், உன்னை குறித்து ஊர் மக்களிடம் சொல்கிறேன் பார் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சுக்ரா தனது மகளை கொலை செய்து வீட்டுக்கு பின்புறம் புதைத்துள்ளார்.

இதையடுத்து அடுத்த நாள் தனது உறவினரிடம், தனது மகள் தற்கொலை செய்து கொண்டார், அதனால் அவர் சடலத்தை புதைத்துவிட்டேன் என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுமியின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்த போது சுக்ராவின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து பொலிசார் சுக்ராவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.