கணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

538

 

மகளுடன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அருகே கணவர் இறந்த 6 நாட்களில் சோகம் தாளாமல் குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 35). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக ரெட்டணை கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் விஷாலி என்ற மகள் இருந்தாள். கடந்த சில மாதங்களாகவே குடும்ப பிரச்னை காரணமாக தம்பதியினர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜு, 8ம் தேதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அன்றிலிருந்தே மனவருத்தத்துடன் சோகமாக இருந்த புவனேஸ்வரி, தனக்கு இனி யாரும் ஆதரவு இல்லை என பக்கத்து வீட்டர்களிடம் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் ராஜூவிற்கு கரும காரியங்கள் செய்யவேண்டியிருந்ததால், புவனேஸ்வரியை அதிகாலையிலிருந்தே உறவினர்கள் தேடியுள்ளனர். குழந்தையும் காணாமல் போயிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பொலிஸாரும் தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். இதற்கிடையில் அதே கிரமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றிருக்கிறார். அங்கு கிணற்றை எட்டிப்பார்த்த போது, உள்ளே புவனேஸ்வரி மற்றும் அவருடைய மகள் விஷாலி சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிஸார் மற்றும் புவனேஸ்வரியின் உறவினர்களுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் இருவரின் உடல்களையும் வெளியில் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த 6 நாட்களே ஆகியிருந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவியும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.