காதலுக்கு உடந்தையாக இருந்த நபருக்கு நேர்ந்த கதி!!

286

திருகோணமலை, சம்பூர் பகுதியில் 18 வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் நயீம் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பதினெட்டு வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு தங்குவதற்கு வீட்டின் அரையை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலன் விளக்கமறியலிலும், காதலி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.