மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மரப்பட்டைகளை கொண்டு சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மரம் மட்டக்களப்பு மாநகர சபையினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நத்தாரை முன்னிட்டு வருடாந்தம் மட்டக்களப்பு மாநகரசபையினால் கழிவுப் பொருட்களால் நத்தார் மரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்படும்.














