இந்திய வீரர்களுக்கு தென் ஆபிரிக்கா மிரட்டல்!!

287

ABDஇந்திய வீரர்களை எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்காவில் டிசம்பர் 5ம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தனது அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள் என்று டிவில்லியர்ஸ் எச்சரித்துள்ளார்.

போட்டி குறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில், இந்திய தொடக்க வரிசை ஆட்டக்காரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதே எங்களது முதல் நோக்கம். இதற்கு எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் கை கொடுப்பார்கள்.

எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் சற்றும் இரக்கம் காட்ட மாட்டார்கள். பந்து வீச்சு மிகக் கடுமையாகவே இருக்கும் என்றும் இந்திய வீரர்கள் திணறப் போவது உறுதி எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவின் தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சற்று அபாயகரமானவர்கள். அவர்களை விரைவாக ஓட்டங்களை எடுக்க விட்டால் எங்களுக்கு கஷ்டமாகி விடும எனவும் விரைவிலேயே 3 அல்லது நான்கு விக்கெட்களை வீழ்த்த முனைவோம் என்றும் கூறியுள்ளார்.