குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான அஞ்சுதன் என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த நபர் கடந்த சில காலமாக கடன் தொல்லையில் சிக்கி தவித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






