மந்திரத்தால் யானைகளை வசியப்படுத்தியவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

622

மந்திரத்தினால் யானைகளை அடக்க முயற்சித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வெஹெரகல நீர்த்தேக்கத்திற்கு அருகில் யானைகளை வசியம் செய்ய முயற்சித்த வேளையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கதிர்காமத்தை சேர்ந்த 41 வயதான குறித்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மேலும் பலருடன் இணைந்து மிருகங்களைப் பார்ப்பதற்காக நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த நேரத்திலே குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மந்திரத்தினால் யானைகளை வசியப்படுத்துவதில் பிரபல்யம் அடைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.