வவுனியா வைத்தியசாலையில் நத்தார் ஆராதனை நிகழ்வு!!

545

வவுனியா பொது வைத்தியசாலையில் நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று (19.12) ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றது.

‘சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கியம்’ அமைப்பின் தலைவர் கெ.கென்னடி தலைமையில் நடைபெற்ற இவ் ஆராதனை நிகழ்வில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் குறித்து சொல்லப்பட்டதுடன் நோயாளர்கள் சுகம் பெற வேண்டி பிராத்தனை செய்யப்பட்டது.

நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர் பி.என் சேகர் மற்றும் ஆராதனை குழுவினர் இப் பிராத்தனை நிகழ்வில் கலந்துகொண்டு நோயாளர்களுக்கு சிற்றுண்டி வகைகள் குழந்தைகளுக்கு பரிசில் பொருட்களும் வழங்கினர்.