முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபர்!!

787

முல்லைத்தீவு – கரைதுரைபற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம் தலைமையகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த, 69 வயதான பெஞ்சமீன் சூசைப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நேற்று அவரது வீட்டிலிருந்து கரைதுரைபற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம் தலைமையகத்திற்கு காவல் கடமைக்காக சென்று இன்று காலை வரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வயோதிபர் உறங்கியவாறே உயிரிழந்துள்ளதாக அங்கு பணிபுரியும் அலுவலகர் ஒருவர் பொலிஸாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.