ரெயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பிரபல கதாநாயகி!!

329

begடேர்ட்டி பிக்சர் படத்தில் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் அவரை விட இரட்டிப்பு கவர்ச்சி காட்டி பல இளைஞர்களை ஏக்கத்துக்குள்ளாக்கிய அதேநேரம் சக நடிகைகளின் தூக்கத்தை கெடுத்தவர் பொலிவுட் கதாநாயகி வித்யா பாலன்.

எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவது இவரது சிறப்பு இயல்பு என சினிமா விமர்சகர்கள் வாய் வலிக்க புகழ்ந்து தள்ளுகின்றனர்.

பொலிவுட் நடிகை டியா மிர்ஸாவின் தயாரிப்பில் ஃபுக்ரே இந்தி பட நாயகனின் ஜோடியாக பாபி ஜஸுஸ் என்ற புதிய பாலிவுட் படத்தில் தற்போது வித்யா பாலன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சவாலான ஆண் வேடமேற்று பிச்சைக்காரனாக நடிக்கும் அவர் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரிஜினலாக பிச்சை எடுக்கும் நபர்களை சில நாட்களாக தூர இருந்து கண்காணித்த அவர் திடுதிப்பென்று ஆண் வேட மேக்கப்புடன் ஐதராபாத் ரெயில் நிலையம் வாசலில் பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் திடீரென்று டேரா போட்டார். கையில் இருந்த சில்லரையை அவர் அசைத்து, அசைத்து ஓசையெழுப்ப அவ்வழியாக சென்ற சிலர் அவரது தட்டிலும் பிச்சை போட்டு சென்றனர்.

வரிசையாக பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்துகொண்டே வந்த முதியவர் உனக்கு என்னப்பா கேடு உடம்பு திமிசு கட்டை மாதிரி தானே இருக்கு உழைச்சி திங்க வேண்டியது தானே என்று கேட்டுவிட்டு ஒரு ரூபாயை போட்டுவிட்டு நகர்ந்தார்.