கடன் வாங்கி வெளிநாடு சென்ற இளைஞன் எடுத்த சோக முடிவு : கண்ணீர் வடிக்கும் குடும்பம்!!

343

 

இளைஞன் எடுத்த சோக முடிவு

கஜா புயல் பாதிப்பால் வீட்டினை இழந்த இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொண்டார். 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

தனது குடும்ப சூழ்நிலை கருதி கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கஜா புயலின் தாக்கத்தால் தென்னை மரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் அழிந்த தகவலறிந்த கலைவாணன், கடந்த 17ம் தேதியன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே கடன் வாங்கி சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருந்த அவர், அந்த கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் இப்படி ஒரு பாதிப்பால் தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் முடங்கியதால், கலைவாணன் இந்த முடிவை எடுத்துள்ளார். கலைவாணனின் உடல், சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு அவரது சொந்து ஊருக்கு எடுத்து வரப்பட்டது.