கொழும்பு துறைமுகத்தில் ரஸ்யாவின் மூன்று கடற்படை கப்பல்கள்!!

537

ரஸ்யாவின் மூன்று கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல்கள் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.

வாய்யோக், அட்மிரல் பன்டேலீவ் மற்றும் பொரிஸ் புட்டோமா ஆகிய கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளன. இந்த கப்பல்களில் சுமார் 800 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்த கப்பல்களில் உள்ள வீரர்கள் இலங்கையின் கடற்படை வீரர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இந்தநிலையில் ரஸ்யாவின் 3 கப்பல்களும் எதிர்வரும் 24ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து திரும்பி செல்லவுள்ளன.