பூட்டிய வீட்டினுள் கிடந்த 4 சடலங்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

552

 

அதிர்ச்சி சம்பவம்

ஐதராபாத் மாநிலத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தில் பொம்மராஸ்பெட் கிராமத்தில் இயங்கி வரும் பிராய்லர் கோழிப்பண்ணையில் சிவசங்கர் (22), அரவிந்த் கௌத் (23), மகேஷ் முடிராஜ் (20), மகேந்தர் ரெட்டி (25) என்கிற 4 இளைஞர்கள் வேலை செய்து வந்துள்ளனர். 4 பேருமே தெலுங்கான மாநிலம் வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து 4 பேருமே அறைக்கு சென்று உறங்கியுள்ளனர். காலை விடிந்தும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த சகஊழியர் சதீஷ் கவுத் (20), கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது 4 பேருமே சடலமாக இறந்து கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஸ் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளான். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் நால்வரின் உடலைகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இரவு நேரத்தில் கடுமையன் குளிர் இருந்ததால் அறையின் உட்பகுதியில் தீ மூட்டி உறங்கியுள்ளனர். இதில் எழுந்த புகையால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.