வவுனியாவில் மழையால் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்பு!!

620

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் லைக்கா கிராமத்தில் 36 குடும்பங்களும், பெரியமடுக் கிராமத்தில் 05 குடும்பங்களும், நைனாமடு கிராமத்தில் 11 குடும்பங்களும், மன்னகுளம் கிராமத்தில் 25 குடும்பங்களுமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் மழை காரணமாக நெடுங்கேணி நாம்பன்குளம் உடைப்பெடுத்த நிலையில் இராணுவத்தின் உதவியுடன் உரப்பை மூலம் உடைப்பு அடைக்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பகுதியில் உள்ள படுகாட்டுக்குளம் மற்றும் நெடுங்கேணி பகுதியில் உள்ள வண்ணாங்குளம் என்பன வான் பாய்கின்றது எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.