மாங்குளம் A9 வீதியில் வெள்ளம் : 55 குடும்பங்கள் இடப்பெயர்வு!!

380

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது.

கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி கற்குவாரிக் குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர் தாழ் நிலத்தை நோக்கி வெட்டிவிடப்பட்டது.

இக்குளத்தில் இருந்து வெளியேறிய நீர் ஏ9 வீதியில் மாங்குளம் சந்தியை ஊடறுத்தது. இதன்காரணமாக மாங்குளம் சந்தியில் வெள்ள நீரால் ஏ9 வீதிப் போக்குவரத்து காலை சில மணிநேரம் பாதிப்படைந்ததுடன் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

கற்குவாரி குளத்து நீர் வெளியேற்றப்பட்டமையால் கற்குவாரியடி மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 55 குடும்பங்கள் பாதிப்படைந்தது இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் மாங்குளம் மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.