நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக பலி!!

307

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் இன்று நீராட சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை குறித்த மாப்பாகந்த ஆற்றில் நீராட சென்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துல் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலியான இருவரின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.