வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் சிரமதானம்!!

518

 

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று (22.12.2018) நடைபெற்றதுடன் பெருமளவிலானோர் சிரமதானத்தில் கலந்துகொண்டனர்.

இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பான அலங்காரம் மற்றும் ஆராதனை நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் தினத்தில் சிறப்பு ஆராதனையில் அனைவரையும் கலந்துகொண்டு இறையாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இயேசுவின் அற்புத சபையினர் அழைக்கின்றனர்.