கிளிநொச்சியில் கடும் வெள்ளம் : உயிரிழப்பும் பதிவாகியது!!

595

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குபட்ட பெரியகுளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.