வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிக்கக் கோரி ஊர்வலம்!!

472

ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.12) வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இருந்து ஊர்வலமாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக குள வீதியையடைந்து மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்திருந்தனர்.

இதன்போது இலங்கையில் சர்வாதிகாரத்தினை நிராகரிப்போம் என்று கொடிகளை தாங்கியவாறு சென்ற இளைஞர்கள் ஜனநாயகம் வேண்டும் சர்வாதிகாரம் வேண்டாம் என்ற கோசத்தினையும் எழுப்பியிருந்தனர்.