யாசகர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!!

459

இரத்தினபுரி குருவிட்ட நகரில் யாசகர் ஒருவரை மற்றுமொரு யாசகர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யாசகர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 50 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட நகரில் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு நித்திரை கொள்ள சென்ற போது, இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர், பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றுள்ளதுடன் கீழே விழுந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுக்கை விரிப்பாக பயன்படுத்தப்படும் அட்டை துண்டுகள் காரணமாக இந்த சண்டை ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்த யாசகரை பொலிஸார் நேற்றிரவே கைதுசெய்துள்ளனர்.