கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

631

 

அதிர்ச்சியில் தந்தை

தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35), இவரது மனைவி பூவிதா, இவர்களுக்கு தேவதர்சினி(4), அஸ்வின்(2) என பிள்ளைகள் இருக்கின்றனர்.

நேற்றிரவு தனது பிள்ளைகளுடன் மணிகண்டன் கண்ணாமூச்சி விளையாடியுள்ளார், அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியிலும், அஸ்வின் காரின் அருகேயும் ஒளிந்து கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக அஸ்வின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்ததில் பலியானான், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தன் மகனின் சாவுக்கு தானே காரணமாகிவிட்டோமே என மனக்கவலையில் இருந்துள்ளார்.

தொடர்ந்து வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், தந்தையை தேடி வந்த தேவதர்சினி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பூவிதா அதிர்ச்சியில் கதற, அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர், அஸ்வினை தேடிய போது அவன் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. மகன் மற்றும் கணவனின் சடலத்தை பார்த்து பூவிதா கதறியது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.