கணவனின் ஆசையால் ஏற்பட்ட கோபம்…. மகனின் கழுத்தை அறுத்து கொன்ற தாயின் விபரீத முடிவு!!

349

 

தாயின் விபரீத முடிவு

திருச்சி மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோமதி (40) என்கிற மனைவியும் 11-வது வகுப்பு படிக்கும் நந்தினி என்கிற மகளும், 9-வது வகுப்பு படிக்கும் சரவணன் (15) என்கிற மகனும் உள்ளனர். முருகனுக்கு தனது சொந்த ஊர் புதுப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. ஆனால், இது கோமதிக்கு பிடிக்கவில்லை.

கோமதிக்கு துவாக்குடி பக்கம் உள்ள தனது சொந்த ஊரான மாங்காவனம் பகுதியிலோ அல்லது திருச்சி நகருக்குள்தான் வீடு கட்ட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. அதை கணவர் முருகனிடம் கூறினார். ஆனால் இதில் முருகனுக்கு விருப்பமில்லை. மேலும் வடக்கு புதுப்பட்டியில் தான் வீடு கட்டுவது என அவர் முடிவெடுத்துள்ளார்.

கடந்த 3 மாத காலமாக இந்த இடம் வாங்கியது குறித்து கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு புதுப்பட்டியில் உள்ள இடத்தில், முருகன் பூமி பூஜை நடத்தியதோடு வீடு கட்டுவதற்கான வேலைகளையும் தொடங்கினார்.

இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற கோமதி கணவரிடம் மீண்டும் தகராறு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, மகன் நந்தினி தனி அறையில் படுத்திருந்துள்ளார். கோமதியும் அவரது மகனும் வேறு ஒரு அறையில் படுத்திருந்துள்ளனர்.

காலை நந்தினி எழுந்து பார்த்தபோது தாய் கோமதியும், தம்பி சரவணனும் படுத்திருக்கும் அறை திறக்காததை கண்டார். பின்னர் அறைக்கதவை தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமான நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை திறந்து பார்த்தார். அங்கு, தாயார் கோமதி தூக்கில் அசைவற்று தொங்கி கொண்டிருந்தார்.

விசாரணையில் மகனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வீடு கட்டும் பிரச்சினையில் தன் மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இருவரது உடல்களையும் பொலிசார் மீட்டு, பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.