வவுனியாவில் போதநாயகிக்கு அஞ்சலி நிகழ்வு!!

465

வவுனியா கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் போதநாயகி திருகோணமலை கடலில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டு 90 வது நினைவு நாள் நிகழ்வு நேற்று (23.12) வவுனியா கற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண மகளிர் விவகார, சிறுவர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கற்குளம் கிராம மக்கள், ந.போதநாயகியின் உறவுகள் பொதுச் சுடரினை ஏற்றி மலர் தூவி போதநாயகியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.