இலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு : குழப்பத்தில் தென்னிலங்கை!!

286

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனஞ்சய டி சில்வாவின் தந்தை வசித்து வந்த ரத்மலனாயில் அமைந்துள்ள வீட்டுக்கு இவ்வாறு பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து பொலிஸ் மா அதிபரிடம், பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை கோரியுள்ளது.

மே மாதம் 25ம் திகதி முதல் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை கடந்த மே மாதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் உயிரிழந்திருந்தார்.

பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த மரணம் சம்பவத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வித அடிப்படையும் இன்றி ஏன் பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.