பிசாசுகளிடம் சிக்கியுள்ள கூட்டமைப்பு : வடமாகாண சபையில் ஆட்சியமைக்கும் சிங்கள கட்சிகள்?

352

சிங்கள கட்சிகள் வடமாகாணசபையில் ஆட்சி அமைக்க கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று மாலை வவுனியா பழைய கற்பகபுரத்தில் கிராம அபிவித்தி சங்க தலைவர் செல்வராஜா தலைமையில் கிராம அபிவிருத்தி சங்க கட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் மட்டும் யாரும் உங்களுக்கு எதுவும் கொடுக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

மகிந்தவை பிரதமராக்கி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறு என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மகிந்தவும் சரத்பொன்சேகாவும் ஒன்றுதான். ஆனால் சரத்பொன்சாவுக்கு வாக்களித்தோம். மகிந்த எமது இனத்தை அழித்த துரோகி, ஏன் என்றால் எமது கடைசி யுத்தத்தில் எமது மக்களை கொன்றழித்தவர்கள்.

ரணில் எல்லாம் தருவார் என நாம் வாக்களிக்கவில்லை. இரண்டு பிசாசில் ஒரு பிசாசை தேர்ந்தெடுத்தோம். எமக்கான அடிப்படை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அதேபோல்

அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை முக்கியம். ஜனாதிபதியும் மகிந்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறினார்கள்.

நாங்கள் மாறி வாக்களித்தவுடன் தற்போது அரசியல் கைதியாக விடுதலை செய்வதாக இருந்தால் கைது செய்த இராணுவத்தினரை விடுவிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் கண் முன்னே சாட்சியத்தோடு ஒப்படைக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பதை, ஜனாதிபதி கூறவேண்டும். நாங்கள் இதற்கு அழுத்தம்

கொடுக்கின்றோமோ, ஐநா சபை நிச்சயமாக அழுத்தம் கொடுக்கும். நாங்கள் வெளியே நின்று ஆதரவு தெரிவித்தமையால், வெள்ளைவான் கடத்தல் இல்லை, மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கு ஏற்றக்கூடியவாறு உள்ளது. எமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய போராட்டங்களை முன்னெடுக்க கூடியதாக உள்ளது.

எமது வடமாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதனால் எதிர் காலத்தில் சுதந்திரக்கட்சியோ வேறு சிங்கள கட்சியோ வடமாகாணசபையை ஆட்சி அமைக்க கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.