ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் வட்டாரம் இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டு, மார்ச் 12 இயக்கத்தின் மூலம் தூய அரசியல் பயணத்தின் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதி கொண்டிருக்க வேண்டிய நற்குணாதிசியங்களை உள்ளடக்கிய பெயர்ப்பலகை வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நாட்டப்பட்டு நேற்று (23.12.2018) மதியம் 2மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ப்ரெல் அமைப்பின் பணிப்பாளர் ஹெட்டியாராச்சி தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பின் மஞ்சுள , நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி,
ஆற்றலரசி பனம்பொருள் உற்பத்தி நிலையத்தினர், அப்றியல் அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா, செயலாளர் கிரிதரன், பொருளாளர் விஜிதரன் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் மற்றும் உறுப்பினர்கள் என இலங்கையின் பிற மாவட்ட இளைஞர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.