சாதி மாறி திருமணம் செய்த மகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெற்றோர்!!

309

 

மகளை எரித்துக் கொன்ற பெற்றோர்

தெலுங்கானா மாவட்டத்தில் மகள் சாதி மீறி திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால் அவளை உயிரோடு எரித்துக்கொலை செய்தேன் என தந்தை பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சக்தி அண்ணா என்பவரின் மகளான அனுராதா வேறு சாதி இளைஞரான லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தனது மகனை அவரது கணவரிடம் இருந்து பிரித்து அழைத்து வந்த சக்தி, வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளார், இதற்கிடையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் அனுராதாவின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனுராதாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மகள் அனுராதா, வேறு சாதியைச் சேர்ந்த லட்சுமி ராஜனை காதலித்தது தனக்கு பிடிக்காததால் அவரை கண்டித்தேன்,

திருமணத்துக்கு பின் லட்சுமி ராஜன் வீட்டில் இருந்த அனுராதாவை, சமாதானப்படுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தது ஏன் எனக் கேட்டு மகன்களுடன் சேர்ந்து அனுராதாவை தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் அடி, உதை தாங்க முடியாமல் அனுராதா சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து அனுராதாவின் உடலை சாக்குப்பையில் மூட்டைகட்டி அருகிலுள்ள வயலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டதாக பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து, முதற்கட்டமாக அனுராதாவின் தந்தை மற்றும் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, காதலை ஏற்க கட்டாயப்படுத்துவதாக, லட்சுமி ராஜன் மீது புகார் கொடுக்கும் படி, அனுராதாவை, அவரது பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது அனுராதாவிடம் விசாரணை நடத்திய பொலிசார், மகளை காதலனிடமிருந்து பிரிப்பதற்காக பெற்றோர் ஆடிய நாடகத்தை தெரிந்துகொண்டு, அனுராதாவின் பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தங்களுக்கு பெற்றோர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தனது பெற்றோரே காரணம் என்று அனுராதா இறப்பதற்கு முன் வீடியோவும் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் அனுராதாவின் தந்தை சக்திக்கு எதிராக திரும்பியுள்ளன.