நாசா கலண்டரில் இடம்பிடித்த தமிழனின் ஓவியம்!!

737

 

தமிழனின் ஓவியம்

2019ம் ஆண்டுக்கான நாசா கலண்டரில் தமிழ்நாட்டை சேர்ந்த தேன்முகிலன் என்பவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் கலண்டரை வெளியிடுகிறது, இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

2019ம் ஆண்டுக்கான காலண்டருக்காக மொத்தம் 194 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக 12 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த தேன்முகிலன் என்பவரும் ஒருவர்.

திண்டுக்கலின் பழனியை சேர்ந்த முகிலன், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பில் இவரது ஓவியம் நவம்பர் மாத பக்கத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.