வவுனியாவிலிருந்து சென்ற கார் விபத்து : மூவர் காயம்!!

478

 

வவுனியாவிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த காரொன்று இன்று காலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அருகில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் காயமடைந்துள்ளனர்.

ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குளத்திற்கு இரு பக்கங்களிலும் போடப்பட்டுள்ள நான்கு தூண்களும் சேதமடைந்துள்ளன.