வடிவேலுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சிங்கமுத்து!!

249

vadiveluவடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். இவர்கள் நடித்த பல காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பின.

அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சிங்கமுத்து மோசடி செய்து விட்டதாக வடிவேலு பரபரப்பு புகார் கூறினார். இதனால் பல வருடங்கள் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. வடிவேலுவும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகஜாலபுஜபல தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். தன்னுடன் சேர்ந்து நடிக்க வரும்படி தனக்கு வடிவேலு தூது அனுப்பியதாக சிங்கமுத்து தெரிவித்தார்.

வாழப்பாடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சிங்கமுத்து பங்கேற்று பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் கூறும்போது, என் மீது மோசடி புகார் தெரிவித்த நடிகர் வடிவேலு கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்தார். சினிமாவில் இருந்த அவர் ஓரங்கப்பட்டு விட்டார். மீண்டும் சினிமாவில் என்னுடன் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு தூது விட்டார். அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு நான் மறுத்து விட்டேன் என்றார்.