செல்பி எடுக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்!!

1022

பண்டாரவளையில், செல்பி எடுக்க முயற்சித்த போது நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயுள்ளனர்.

பண்டாரவளை அம்பதண்டேகம பம்பரகம நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞர்கள், அந்த இடத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை எடுக்கச் சென்றிருந்த போது நீர் வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மற்றுமொரு இளைஞரும் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

பாண்டாரவளை ஹீல்ஓயா என்னும் இடத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞரும், வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞருமே இவ்வாறு நீரில் வீழ்ந்து காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன இளைஞர்களை தேடும் பணிகளில் பண்டாரவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.