விளையாடிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!

413


மும்பையின் பண்டுப் பிராந்தியத்தில் டென்னிஸ்-பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்தன.



கடந்த 23ம் திகதி 2 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது வைபவ் கேஸ்கர் என்ற 24 வயதான வீரர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.