பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் விபத்து : முதியவர் படுகாயம்!!

856

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தனிலிருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மஞ்சள் கோட்டுக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாகவே நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.