டுபாயில் நடத்த விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த அழகிய இளம்பெண்!!

313

 

அழகிய இளம்பெண்

கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவர் அவளது குடும்பத்தாருக்கு Dh200,000 பணத்தை கொடுத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த திவ்யா (25) அவரது கணவர் பிரவீன் (25) மற்றும் குழந்தை தக்‌ஷ் (2) உடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சார்ஜாவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மூவரும் காரில் சென்றனர். விழா முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது காரை ஓட்டிய பிரவீன் தூங்கிய நிலையில் காரானது அங்கிருந்த அறிவிப்பு பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திவ்யா உயிரிழந்த நிலையில் பிரவீனும், குழந்தை தக்‌ஷும் காயமின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திய பிரவீன், திவ்யா குடும்பத்துக்கு Dh200,000 பணத்தை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அறிவிப்பு பலகையை சேதப்படுத்தியதற்கு Dh2500 அபராதமும் செலுத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பிரவீன் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து பிரவீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த தொகையை தயார் செய்து கொடுத்தபின்னர் பிரவீன் விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் துபாய் விமான நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு திவ்யாவின் சடலம் கொண்டுவரப்பட்டது. அப்போது பிரவீனும், குழந்தை தக்‌ஷும் உடன் வந்தனர். இதனிடையில் சட்ட நடைமுறைகளை நிறைவுசெய்த பின்னர் காப்பீட்டுத் தொகையை கோர தகுதியுடையவராக பிரவீன் இருப்பார் என தெரியவந்துள்ளது.